இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு மத்திய பட்ஜெட் காரணம் அல்ல: அருண் ஜேட்லி
இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு மத்திய பட்ஜெட் காரணம் அல்ல உலகளாவிய காரணிகள்தான் காரணம்
புதுதில்லி: இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு மத்திய பட்ஜெட் காரணம் அல்ல உலகளாவிய காரணிகள்தான் காரணம் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்
மேலும் அவர் கூறும் போது பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு மத்திய அரசின் பட்ஜெட்டோ நீண்டகால மூலதன ஆதாயங்களின் மீதான வரி சீரமைப்போ காரணம் அல்ல உலகளாவிய காரணிகள்தான் இதற்குக் காரணம்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க பங்குகளின் கூர்மையான வீழ்ச்சியை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். டவ் ஜோன்ஸ் இண்டஸ்ட்ரியலின் சராசரி இழப்பு 665.75 புள்ளிகள் அல்லது 2.54 சதவீதம் இருந்திருக்கிறது. முடியும் தருவாயில் 25,520.96 என சரிந்துள்ளது'' என்றார்.