முகப்பு
தற்போதைய செய்திகள்

செவிலியர் தற்கொலைக்கு நீதி கேட்டும் மருத்துவர்களைக் கண்டித்து விடிய விடிய போராட்டம் 

வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த செவிலியர் தற்கொலை விவகாரத்தில், அங்கு பணிபுரிந்த மருத்துவர்கள் மீது வழக்குப்

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:13 PM
பகிர்:

வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த செவிலியர் தற்கொலை விவகாரத்தில், அங்கு பணிபுரிந்த மருத்துவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி, காங்கயத்தில் அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் விடிய விடிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், வெள்ளக்கோவிலில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தவர் மணிமாலா (26). இவர் சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

இதை அறிந்ததும் காங்கயம், தாராபுரம் திருப்பூர், வெள்ளக்கோவில் ஆகிய அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் காங்கயம் அரசு மருத்துவமனை முன்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, மணிமாலாவை தற்கொலை செய்யத் தூண்டியதாக மருத்துவர்கள் தமயந்தி, சக்தி அகிலாண்டேஸ்வரி ஆகியோரின் அதிகாரப் போட்டியே காரணமென குற்றம்சாட்டிய தமிழக செவிலியர் சங்கத்தினர், அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியும், உடலை வாங்காமல் உறவினர்கள் செவிலியர் மற்றும் அரசு ஊழியர் சங்கத்தினர் விடிட விடிய தொடரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் தற்கொலைக்கு காரணமான இருவரையும் கைது செய்தால் மட்டுமே செவிலியர் மணிமாலாவின் உடலை வாங்கப்போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இப் பிரச்னை தொடர்பாக காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் மாவட்ட துணை ஆட்சியர் லியாகத் (பொறுப்பு), காங்கயம் வட்டாட்சியர் மாணிக்கவேல், டிஎஸ்பி. கிருஷ்ணசாமி, காங்கயம்- வெள்ளக்கோவில் போலீஸார், திருப்பூர் மாவட்ட மாதர் சங்க நிர்வாகி, மாவட்ட செவிலியர் சங்கம், மருத்துவப் பணியாளர் சங்க நிர்வாகிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எட்டபடவில்லை. 

முழு கட்டுரையைப் படிக்க →