அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்
அருணாச்சல பிரதேசம், தேஜூ அருகே டெஸ்யூ நகரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகி உள்ளது.
தேஜூ: அருணாச்சல பிரதேசம், தேஜூ அருகே டெஸ்யூ நகரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகி உள்ளது.
தேஜூவில் இருந்து 114 கி.மீட்டர் தொலைவில் மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலைகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.