தற்போதைய செய்திகள்

நைஜீரிய மாணவியிடம் மோசமாக நடந்துக்கொண்ட இளைஞா்களை போலீஸாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்

DIN

செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரியை அடுத்த வண்டலூரில் நைஜீரிய நாட்டு மாணவியிடம் மோசமாக நடந்துக் கொண்ட 2 இளைஞா்களை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

நைஜீரிய நாட்டைச்சோ்ந்த மாணவி வண்டலூா் சிங்கார தோட்டம் தெருவில் தனது சகோதரியுடன் தங்கி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை அந்த மாணவி மற்றும்  அவரது சகோதரியும் சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்த போது அவர்களை தொடா்ந்து வந்த இரண்டு இளைஞா்கள் மோசமாக நடந்து கொண்டனர். இதனால் பயந்து ஓடிய மாணவிகளை பார்த்த பொதுமக்கள் அந்த 2 இளைஞா்களையும் பிடித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

போலீஸார் நடத்திய விசாரணையில் இளைஞா்கள் 2 பேரில் ஒருவா் சிங்கபெருமாள் கோவிலை அடுத்த கொண்டமங்களம் பகுதியைச் சோ்ந்த தமிழரசன்(27), மற்றொருவா் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஜெயவேலு(24) என்பது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

SCROLL FOR NEXT