வி.ஹெச்.பி. சார்பில் உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் தொடங்கிய ராம ராஜ்ய ரத யாத்திரை கேரளத்தில் இருந்து தென்காசிக்கு செவ்வாய்க்கிழமை வந்தடைந்தது. இந்த ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏ-க்கள் சட்டப் பேரவையில் போராட்டம் நடத்தியதுடன், தமிழகம் முழுவதிலும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஜவாஹிருல்லா, திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்தும், ரத யாத்திரைக்கு எதிராகவும் திமுக மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இந்த ரத யாத்திரை எங்கும் நிற்காமல் மின்னல் வேகத்தில் மதுரை அய்யர்பங்களா பகுதியை சென்றடைந்தது. இதையடுத்து இந்த ரதம் ராமநாதபுரம் சென்றடைந்துள்ளது.