முகப்பு
தற்போதைய செய்திகள்

இந்தோனேசியாவில் போலீஸ் தலைமை அலுவலகத்தில் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி

இந்தோனேசியா நாட்டில் சரபயா என்ற இடத்தில் போலீஸ் தலைமை அலுவலகத்தில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

Updated On : 14 மே, 2018 at 9:44 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:32 PM

இந்தோனேசியா நாட்டில் சரபயா என்ற இடத்தில் போலீஸ் தலைமை அலுவலகத்தில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் நடத்திய இந்த வெடிகுண்டு தாக்குதலில் போலீஸ் அலுவலகத்தில் இருந்த 7 பேர் கொல்லப்பட்டனர். 

இந்த குண்டு வெடிப்பு உள்ளூர் நேரப்படி காலை 8.50 மணியளவில் நிகழ்ந்ததாக கிழக்கு ஜாவா போலீஸ் செய்தி தொடர்பாளர் பிரான்சு பாருங் மாங்க்ரா தெரிவித்தார். குண்டு வெடிப்பில் நான்கு போலீஸ்காரர்களும் ஆறு பேரும் காயமடைந்தனர் எனவும் ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும் முதல்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மேலும் இச்சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் ஒரு வாகனத்தில் வந்த 2 பெண்கள் போலீஸ் நிலையம் அருகே வந்த போது வாகனத்தை ஓட்டி வந்த அந்த பெண் வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக அங்கிருந்த சி.சி.டிவி காட்சிகளில் தெரியவந்துள்ளது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.