தற்போதைய செய்திகள்

நீதிமன்றங்களில் 2 லட்சத்துக்கும் மேலான வழக்குகள் தேக்கம்: தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் வேதனை

நாட்டில் சுமார் 90 லட்சத்துக்கு மேல் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளில், 20 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகளிலும், 2 கோடி 10 லட்சம்

DIN


கவுகாத்தி: நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் வேதனை தெரிவித்துள்ளார். 

அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசு விழா ஒன்றில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் கலந்துகொண்டு பேசுகையில், நாடு முழுவதும் காலியாக உள்ள 6 ஆயிரம் விசாரணை நீதிமன்ற நீதிபதிகளின் பணியிடங்களில் இதுவரை 4 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மேலும் சுமார் 1500 விசாரணை நீதிமன்ற நீதிபதிகளின் காலியிடங்கள் நவம்பர் இறுதிக்குள் அல்லது டிசம்பர் இறுதிக்குள் நிரப்பப்படுவர் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

மேலும் நாட்டில் சுமார் 90 லட்சத்துக்கு மேல் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளில், 20 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகளிலும், 2 கோடி 10 லட்சம் கிரிமினல் வழக்குகளில், 1 கோடிக்கு மேற்பட்ட வழக்குகள் சம்மன் கூட இன்னும் அனுப்பப்படாத நிலையில் உள்ளதாக வேதனை தெரிவித்த தலைமை நீதிபதி, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதில் நீதிபதிகள் கவனம் செலுத்த வேண்டும் வலியுறுத்தினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT