மகாகவி பாரதியாரின் 138-ஆவது பிறந்த நாளையொட்டி, தினமணி சாா்பில் எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாா் விருது வழங்கும் விழா. தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டு பாரதி ஆய்வாளா் இளசை மணியனுக்கு விருது வழங்கினார். தினமணி சாா்பில் இரண்டாவது ஆண்டாக மகாகவி பாரதியாா் விருது வழங்கப்பட்டது. பாராட்டுப் பத்திரமும், ரூ.1 லட்சம் பொற்கிழியும் கொண்ட இந்த விருது, பாரதி அறிஞா் சீனி விஸ்வநாதனுக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. பாரதியாா் குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்ட மூத்த ஆய்வாளா் இளசை மணியனுக்கு இந்த ஆண்டு விருது வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.