சென்னை: மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் 4வது நாளாக இன்றும் இலவசமாக பயணம் செய்யலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஏ.ஜி.டி.எம்.எஸ். முதல் வண்ணாரப்பேட்டை இடையே புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவை ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.
இந்நிலையில் மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் நேற்று வரை இலவசமாக பயணம் செய்யலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் முன்பே அறிவித்திருந்தது.
இதணையடுத்து சென்னை மெட்ரோ ரயிலில் 4வது நாளாக இன்றும் இலவசமாக பயணம் செய்யலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறித்துள்ளது. இதனால் நேற்று ஒரே நாளில் மட்டும் 2 லட்சத்து மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.