தற்போதைய செய்திகள்

இந்திரா காந்தி நினைவிடத்தில் சோனியா, மன்மோகன் மரியாதை!

DIN



புதுதில்லி: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவுநாளையொட்டி, தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் மலர்தூவி ம​ரியாதை செலுத்தினர்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 35வது நினைவு தினம் இன்று. இதனையொட்டி நாடு முழுவதும் இந்திரா காந்தியின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தில்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தலைவர்கள் மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.

இந்தியாவின் இரும்பு மனுஷி என்று அனைவராலும் பாராட்டப்பட்ட இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, தன்னுடைய பாதுகாப்பு காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரின் மறைவானது உலக அரங்கில் பெரிய அதிர்வினையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT