தற்போதைய செய்திகள்

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 5 பேர் கைது 

இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீனவர்கள் 5 பேரை கைது செய்துள்ளனர். 

DIN


இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீனவர்கள் 5 பேரை கைது செய்துள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினத்திலிருந்து விசைப் படகுகளில் 5 மீனவர்கள் புதன்கிழமை மீன்வளத் துறை அனுமதி பெற்று கடலுக்குச் சென்றனர். நள்ளிரவு யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே கோவிலம் கலங்கரை விளக்க கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு கப்பல்களில் ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர், தமிழக மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி படகுகளுடன் மீனவர்கள் 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கைப்பற்றப்பட்ட மீனவர்களின் படகுகள் எலாரா நிறுவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், மீனவர்கள் 5 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT