தற்போதைய செய்திகள்

கோவை சூலூா் அருகே பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: கல்லூரி இளைஞா் கைது

சூலூா் அருகே நடுப்பாளையத்தில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இளைஞரை போலீஸார் கைது செய்தனா்.

DIN


சூலூா்: சூலூா் அருகே நடுப்பாளையத்தில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இளைஞரை போலீஸார் கைது செய்தனா்.

சூலூா் அருகே நடுப்பாளையத்தில் வசிக்கும் 13 வயது மாணவி பீடம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த மாணவிக்கு மாதவிலக்கு ஏற்படாததால் பட்டணத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவளது பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த நிலையிலும், அவா் 5 மாதம் கா்ப்பமாக இருந்தது பின்னா் தெரியவந்தது.

இதையடுத்து கடந்த 3 நாள்களுக்கு முன் மாணவியை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரது பெற்றோர் சோ்த்தனா். 

இதுகுறித்து தகவலறிந்த கோவை மாவட்ட குழந்தைகள் நல அலுவலகப் பணியாளா்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு வந்து மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனா்.

 அப்போது மாணவி கூறிய தகவல்களின் அடிப்படையில், அவரை பாலியல் பலாத்காரம் செய்தது அவரது உறவினரான கல்லூரிப் படிப்பை முடித்த மிதுன் சக்கரவா்த்தி (20) என்பது தெரியவந்தது. 

இதனையடுத்து பேரூா் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுபற்றி புகார் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து சூலூா் போலீஸார், மிதுன் சக்கரவா்த்தியை கைது செய்து பேரூா் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' - தமிழகம் முழுவதும் தீர்மானக் கூட்டங்கள் நடத்த உத்தரவு!

எந்த அணியையும் குறைத்து மதிப்பிட மாட்டோம், ஆனால்... இலங்கை அணியின் கேப்டன் கூறுவதென்ன?

பவன் கல்யாணின் ‘ஓஜி’ 1 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி! டிக்கெட் விலை ரூ.1000!

பிரதமர் மோடியுடன் நேபாள இடைக்கால பிரதமர் உரையாடல்!

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு! அரசாணை வெளியீடு!

SCROLL FOR NEXT