முகப்பு
தற்போதைய செய்திகள்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனை

வடகிழக்கு பருவமழையையொட்டி எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:10 AM
பகிர்:

சென்னை: வடகிழக்கு பருவமழையையொட்டி எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில், பருவமழை காலத்தில் மழை அதிகமாக பெய்தால் சாலைகளில் ஏற்படும் பழுதுகளை சரிசெய்வது, மக்களுக்கு நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பது, தற்காலிக மருத்துவ முகாம்களை அமைப்பது, தடையில்லா மின்சாரம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயாஸ்கர், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மற்றும் தலைமைச் செயலாளர் சண்முகம், டி.ஜி.பி.திரிபாதி, வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →