அலீஷா ஹீலிக்கு இந்திய மகளிர் மரியாதை..! ஓய்வுக்கு முன்பாக சதம்!
கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்த ஆஸி. மகளிரணியின் கேப்டன் குறித்து...
ஆஸ்திரேலிய மகளிரணியின் கேப்டன் அலீஷா ஹீலி தனது கடைசி ஒருநாள் போட்டியில் சதம் அடித்து அசத்தினார்.
இந்திய மகளிரணியினர் அவருக்கு பேட்டிங் விளையாட வரும்போது, ’காட் ஆஃப் ஹானர்’ எனும் மாரியாதையைக் கொடுத்து வரவேற்பு அளித்தார்கள்.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என ஆஸ்திரேலிய அணி தொடரை வென்றுள்ளது. கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிரணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்துவரும் ஆஸ்திரேலிய மகளிரணி 42 ஓவர்களில் 328/4 ரன்கள் எடுத்துள்ளது.
தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய அலீஷா ஹீலி 98 பந்துகளில் 158 ரன்கள் எடுத்து அசத்தினார். தனது கடைசி போட்டியை மறக்க முடியாத ஒன்றாக மாற்றியுள்ளார்.
இந்தியா சார்பில் ஸ்நே ராணா 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.