தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 22 பேரை தனிமைப்படுத்தி பரிசோதனை நடைபெற்று வருகிறது.
தில்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று திரும்பிய வந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 22 பேரை, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தி பரிசோதனை நடைபெற்று வருகிறது.
போடியைச் சேர்ந்த 16 பேர், பெரியகுளம் மற்றும் உத்தமபாளையத்தைச் சேர்ந்த தலா 3 பேர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்று வருகிறது.
இந்தப் பரிசோதனைக்குப் பின்னரே இவர்களுக்கு கரோனா அறிகுறிகள் உள்ளதா என்ற விபரம் தெரியவரும் என்று மருத்துவ அலுவலர்கள் கூறினர்.