மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு 9,318 பலி 400- ஐ தாண்டியது
மகாராஷ்டிரம் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை புதிதாக 729 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை: மகாராஷ்டிரம் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை புதிதாக 729 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 9,318 ஆக உயர்ந்துள்ளது என்று மாநில பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மேலும் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை 1,388 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 31 பேர் தொற்று பாதிப்பால் பலியாகியுள்ளனர், மாநிலத்தில் இதுவரை பலி எண்ணிக்கை 400 -ஆக உயர்ந்துள்ளது.