தற்போதைய செய்திகள்

அருப்புக்கோட்டை: மின் கம்பிகளை உரசும் மரக்கிளைகளால் விபத்து அபாயம்

DIN

அருப்புக்கோட்டை, ஆக.1: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மலையரசன் கோவில் சாலையில் மின் கம்பிளை உரசும் மரக்கிளைகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே விரைவில் அம்மரக்கிளைகளை அகற்றக் கோரிக்கை எழுந்துள்ளது.

அருப்புக்கோட்டை தெற்குத்தெருவிலிருந்து மலையரசன் கோவில் செல்லும் சாலையில் தனியார் மர அறுவை ஆலை ஒன்று உள்ளது. இதனருகே சாலையோரம் உள்ள இரட்டை மின் கம்பங்களிலிருந்து அடுத்துள்ள மின் கம்பத்திற்குச் செல்லும் மின் கம்பிகளை அச்சாலையோரம் உள்ள மரத்தின் கிளைகள் உரசிய வண்ணம் உள்ளன.

இதனால் மழை அல்லது காற்று வீச்சுக்குக் கிளைகள் அசையும் போது மின்சாரம் பாய்ந்து விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. இப்பகுதியினரும் மழைக்காலங்களில் இந்த மின்கம்பங்கள் உள்ள இடத்தை அச்சத்துடனே கடந்து செல்ல நேர்கிறது.

இந்நிலையில் பொதுமக்கள் இம்மரக்கிளைகளைத் தாமே அகற்ற முற்பட்டால் மின்சாரம் பாய்ந்து விபத்து நேருமோ என அச்சம் கொள்கின்றனர். இதனால் மின்வாரிய ஊழியர்கள் உரிய முறையான நடவடிக்கை மூலம் இம்மரக்கிளைகளை அகற்றக் கோரி இப்பகுதிவாசிகள் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லையெனப் புகார் எழுந்துள்ளது.

எனவே விபத்து நேரும் முன்பாக மின்கம்பிகளை உரசும் மரக்கிளைகளை அகற்ற வேண்டுமென இப்பகுதிவாசிகள் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT