தற்போதைய செய்திகள்

காஷ்மீர்: நீரில் மூழ்கி இளைஞர் ஒருவர் பலி

DIN

வடக்கு காஷ்மீர் மாவட்டமான பாண்டிபோராவில் செவ்வாய்க்கிழமை நீரில் மூழ்கி ஒரு இளைஞர் உயிரிழந்தார், மற்றொருவர் மீட்கப்பட்டார்.

நோவ்போராவில் வசிக்கும் சமீன் ஷபீர் (வயது 15) மற்றும் பிர்தஸ் அஹ்மத் (16) என்ற இளைஞர்கள் பாண்டிபோராவின் குல்சூவில் உள்ள மதுமதி நல்லாவில் குளித்துக் கொண்டிருக்கும் போது நீரில் மூழ்கினர்.

மூழ்வதைக் கண்ட உள்ளூர்வாசிகளும் காவல்துறையினரும் உடனடியாக மீட்பு பணியைத் தொடங்கினர். மேலும், இரு இளைஞர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் சிகிச்சைப் பலனின்றி சமீன் ஷபீர் உயிரிழந்தார்.

மாவட்ட நிர்வாகம் விதித்த தடையை மீறி இளைஞர்கள் மதமதி நல்லாவில் குளித்ததால் தான் இந்த சம்பவம் நேர்ந்தது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT