சட்டீஸ்கர் : எய்ம்ஸ் மருத்துவமனையில் கரோனா நோயாளி தற்கொலை
சட்டீஸ்கர் எய்ம்ஸ் மருத்துவமனையின் இரண்டவது தளத்தில் இருந்து குதித்து கரோனா நோயாளி தற்கொலை செய்து கொண்டார்.
சட்டீஸ்கர் எய்ம்ஸ் மருத்துவமனையின் இரண்டவது தளத்தில் இருந்து குதித்து கரோனா நோயாளி தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து காவல்துறை ஆதிகாரி ஒருவர் கூறுகையில்,
சட்டீஸ்கரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி 65 வயது முதியவர் ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டார். இவர் இன்று அதிகாலை 2 மணிக்கு மருத்துவமனையின் இரண்டாம் தளத்தில் உள்ள கழிவறையின் ஜன்னல் வழியாக குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தற்கொலை குறிப்பு எதுவும் கைப்பற்றவில்லை என கூறினார்.
இதுபோன்ற சம்பவம் கடந்த வாரம் ஜான்கிரில் மாவட்டத்தில் உள்ள கரோனா சிகிச்சை மையத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.