புதுதில்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பாஜக தலைமையிலான அரசின் முதல் பிரதமர் மறைந்த மூத்த தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாய். உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி காலமானார். அவரது 2-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தேசிய தலைநகர் தில்லியில் உள்ள அவரது நினைவிடமான “சதைவ் அடல்” மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், வாஜ்பாய் மகள், குடிம்பத்தினர் மற்றும் பிற கட்சி தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
வாஜ்பாய் நினைவு நாளையொட்டி அவரை நினைவு கூர்ந்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நீங்கள் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக எடுத்துக்கொண்ட முயற்சிகளையும், ஆற்றிய சேவையை நாடு எப்போதும் நினைவில் வைத்திருக்கும்” அடல் வாஜ்பாயின் புண்ணிய திதியில் அவருக்கு எனது அஞ்சலி என மோடி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பொது வாழ்க்கைக்கும், இந்தியாவின் வளர்ச்சிக்கு வாஜ்பாயின் மகத்தான பங்களிப்பை செய்துள்ளார், அவை எப்போதும் போற்றப்படும், மேலும் நாட்டிற்கான அவரது செயல் தொடர்ந்து வரும் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் என்றார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா, வாஜ்பாய் தலைமையின் கீழ்தான் நாடு முதன்முதலில் "நல்லாட்சி" நிர்வாகத்தை கண்டது.
அதனைத் தொடர்ந்து மோடி தலைமையிலான அரசும் ஏழைகளின் நலன் மற்றும் நல்லாட்சியை வழங்கி வருகிறது என அமித் ஷா கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.