திருவனந்தபுரத்தில் கோயில்கள் திறப்பு: பக்தர்கள் வழிபாடு
ஆவணி மாத பிறப்பையொட்டி கேரளத்தில் திருவாங்கூர் தேவசம்போர்டு சார்பில் கோயில்கள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆவணி மாத பிறப்பையொட்டி கேரளத்தில் திருவாங்கூர் தேவசம்போர்டு சார்பில் கோயில்கள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மார்ச் மாதம் முதல் கரோனா பரவல் அதிகரித்து வந்ததால், அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரட்ஙகு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கேரளத்தில் கோயில் உள்ளிட்ட புனித தலங்கள் மூடப்பட்டன. இதனிடையே கேரள மாத பிறப்பான சிங்கம் மாத பிறப்பையொட்டி கோயில்களை திறக்க திருவாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்தது. அதன்படி திருவனந்தபுரத்தில் இன்று முதல் கோயில்கள் திறக்கப்பட்டுள்ளன.
பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலும் இன்று திறக்கப்பட்டது. எனினும் சிறப்பு பூஜைகள் எதுவும் நடத்தப்படவில்லை. பக்தர்கள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் காலை முதல் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.