ஒடிசா வனப்பகுதியில் யானைக் குட்டியின் சடலம் மீட்பு
ஒடிசாவின் வனப்பகுதியில் ஒரு குளத்தில் யானையின் சடலம் வெள்ளிக்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
ஒடிசாவின் வனப்பகுதியில் ஒரு குளத்தில் யானையின் சடலம் வெள்ளிக்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள ஹெம்கிர் வனப்பகுதியில் குட்டி யானை ஒன்று இறந்த நிலையில் குளத்தில் கிடப்பதாக அப்பகுதி மக்கள் தகவலி கொடுத்தனர்.
Advertisement
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் குட்டி யானை எவ்வாறு இறந்தது என ஆய்வு செய்தோம். இந்தக் குட்டி யானை அருகிலுள்ள யானைகளின் மந்தைகளிலிருந்து வந்து தவறி விழுந்து இருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என கூறினார்.