இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார் ராஜிவ் குமார்
இந்திய தேர்தல் ஆணையராக இருந்த அசோக் லாவாசா பதவியை ராஜிநாமா செய்ததை அடுத்து புதிய தேர்தல் ஆணையராக ராஜிவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய செய்திகள்இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார் ராஜிவ் குமார்
இந்திய தேர்தல் ஆணையராக இருந்த அசோக் லாவாசா பதவியை ராஜிநாமா செய்ததை அடுத்து புதிய தேர்தல் ஆணையராக ராஜிவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையராக இருந்த அசோக் லாவாசா பதவியை ராஜிநாமா செய்ததை அடுத்து புதிய தேர்தல் ஆணையராக ராஜிவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
அசோக் லாவாசா ஆசிய வங்கியின் துணைத்தலைவராக தேர்வானதால் தன் பதவியை ராஜிநாமா செய்தார்.
இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதத்தில் பொது நிறுவனத் தேர்வு வாரியத் தலைவராக நியமிக்கப்பட்ட ராஜிவ் குமார் தற்போது தேர்தல் ஆணையத்தின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் 1984-ல் ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து இந்திய ஆட்சி பணியில் தேர்வானார். நிதி அமைச்சகம் மற்றும் பணியாளர் அமைச்சகத்தில் அதிகளவில் பணியாற்றியவர். 10 பொதுத்துறை வங்கிகளை 4 ஆக இணைத்ததில் இவரது பங்கு பெரியது.
பிரதமர் நரேந்திர மோடியின் அரசு முன்னெடுத்த அனைத்து நிதித்துறை திட்டங்களையும் முன் நின்று செயல்படுத்தியதால் அரசின் நம்பிக்கையைப் பெற்றார்.