திரிபுராவில் புதிய உச்சம் : ஒரே நாளில் 509 பேருக்கு கரோனா
திரிபுராவில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 509 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திரிபுராவில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 509 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
இன்று புதிதாக 509 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு 10,433 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 4 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 142 பேர் தொற்றில் இருந்து குணமடைந்ததை அடுத்து மொத்தம் 6,839 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், தற்போது 3,486 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.