முகப்பு
தற்போதைய செய்திகள்

முன்னாள் காவல்துறை அதிகாரி அண்ணாமலை உள்பட பாஜகவினர் 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவையில் ஊரடங்கு சட்டத்தை மீறியதாக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை உட்பட பாஜகவின் தலைமை பிரமுகர்கள் 5 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
கோவைக்கு வந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு கோவை காந்திபுரத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
பகிர்:

கோவையில் ஊரடங்கு சட்டத்தை மீறியதாக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை உள்பட பாஜகவின் தலைமை பிரமுகர்கள் 5 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பாஜகவில் இணைந்த பிறகு முதன்முறையாக கோவைக்கு வந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு கோவை காந்திபுரத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அக்கட்சியின் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பும் நடைபெற்றது.

இந்த நிலையில் ஊரடங்கு விதிகளை மீறிய குற்றத்துக்காக கோவை காட்டூர் காவல்துறை, அண்ணாமலை உட்பட தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை, கோவை மாவட்டத் தலைவர் நந்தகுமார், மாநில பொது செயலாளர் ஜி.கே.செல்வக்குமார், மாநில துணைத்தலைவர் கனக சபாபதி, மாநில பொருளாளர் எஸ்.ஆர்.. சேகர் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 143, 341, 269, 285 ஆகியவற்றின் கீழும் பேரிடர் மேலாண்மைச் சட்டம் பிரிவு 3இன் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சட்டவிரோதமாக கூடுதல், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுதல், நோய்பரப்பும் வகையில் செயல்படுதல், ஆபத்தை விளைவிக்கும் செயல்படுதல் மற்றும் தொற்றுநோய் பரவல் தடுப்பு சட்டம் ஆகிய ஐந்து குற்றங்களுக்காக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →