முகப்பு
தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிரத்தில் கொலை வழக்கில் 2 இளைஞர்கள் கைது

பால்கர் மாவட்டம் அருகே இளைஞரைக் கொன்ற வழக்கில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
மகாராஷ்டிரத்தில் கொலை வழக்கில் 2 இளைஞர்கள் கைது (கோப்புப்படம்)
பகிர்:

மகாராஷ்டிரம் : பால்கர் மாவட்டம் அருகே இளைஞரைக் கொன்ற வழக்கில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பால்கர் மாவட்டம் போய்சார் பகுதியில் வசித்து வந்தவர் ஸ்ரீரதன் ராய் (வயது20). இவர் கடந்த ஆகஸ்ட் 23 முதல் காணவில்லை என அவரது பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில், போய்சரில் உள்ள ஒரு விடுதி அருகே புதரில் ஒரு சடலத்தை வியாழக்கிழமை கண்டுபிடித்தனர். பின்னர் அது ராய் என அடையாளம் காணப்பட்டது.

மேலும், காவல்துறை விசாரணையில், போய்சாரில் பணிபுரியும் 19 வயதுடைய இரு இளைஞர்கள் சில நாள்களுக்கு முன் ராயிடம் பிரச்சனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து,  இரு இளைஞர்களை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.