ஆப்கனில் நடந்த போரில் 44 தலிபான்கள் சுட்டுக்கொலை
ஆப்கானிஸ்தான் படைகளுடன் நடந்த போரில் 44 தலிபான்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர், 37 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் படைகளுடன் நடந்த போரில் 44 தலிபான்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர், 37 பேர் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து துணைத் தளபதி ஜெனரல் ஆடம் கான் மாட்டின் கூறுகையில்,
ஆப்கானிஸ்தானின் வடக்கு குண்டுஸ் மாகாணத்தில் ஆப்கானிய படைகளுடன் கடந்த நான்கு நாள் நடந்த போரில் மொத்தம் 44 தலிபான்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் 37 தலிபான்கள் காயமடைந்துள்ளனர்.
தலிபான்களால் முற்றுகையிடப்பட்ட மாகாணத்தின் இமாம் சாஹிப் மாவட்டத்தில் இரண்டு தளங்களை மீண்டும் ராணுவம் கைப்பற்றியுள்ளது என கூறினார்.