தற்போதைய செய்திகள்

தமிழ்வழி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு: ஆளுநர் ஒப்புதல்

DIN

தமிழ் வழியில் பயின்றவா்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வில் 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவிற்கு ஆளுநர் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தேர்வில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்காக மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

இதனையடுத்து கடந்த 8 மாதங்களாக நிலுவையில் இருந்த மசோதாவிற்கு செவ்வாய்க்கிழமை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.

இடஒதுக்கீட்டிற்கான மசோதாவிற்கு ஆளுநர் எப்போது ஒப்புதல் அளிப்பார் என கடந்த வாரம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT