‘அமெரிக்கர்களுக்கு கரோனா தடுப்பூசி’: டிரம்ப்
அமெரிக்காவில் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிரம்ப் வெளியிட்ட சுட்டுரை செய்தியில்,
அமெரிக்காவில் முதல் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. அமெரிக்காவிற்கும், உலகத்தினருக்கும் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
உலகளவில் அமெரிக்காவில் தான் அதிகளவிலான மக்கள் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.