கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

ராஜஸ்தானில் 9 குழந்தைகள் பலி: மருத்துவமனை கண்காணிப்பாளர் பதவி நீக்கம்

ராஜஸ்தான் மருத்துவமனையில் நவம்பர் 10ஆம் தேதி ஒன்பது குழந்தைகள் உயிரிழந்ததையடுத்து மருத்துவமனை கண்காணிப்பாளரை பதவி நீக்கம் செய்து மாநில அரசு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

ANI

ராஜஸ்தான் மருத்துவமனையில் நவம்பர் 10ஆம் தேதி ஒன்பது குழந்தைகள் உயிரிழந்ததையடுத்து மருத்துவமனை கண்காணிப்பாளரை பதவி நீக்கம் செய்து மாநில அரசு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள ஜே.கே.லான் மருத்துவமனையில் டிசம்பர் 10 ஆம் தேதி (24 மணி நேரத்தில்) 9 கைக்குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

குழந்தைகள் உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறியும் பொருட்டு, மாநில சுகாதார அமைச்சகத்தின் 4 அதிகரிகள் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்து மாநில அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் விசாரணைக் குழு சமர்பித்த அறிக்கையில், 3 குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு வரும்போதே உயிரிழந்த நிலையில் இருந்ததாகவும், 3 குழந்தைகள் பிறவி நோயால் உயிரிழந்ததாகவும், எஞ்சிய மூன்று குழந்தைகள் பிறக்கும் போதே இறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.சி துலாராவை பதவி நீக்கம் செய்து மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனையாக விளங்கும் ஜே.கே. லோன் மருத்துவமனையில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 100 குழந்தைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எழுத்தாளர் கி.ரா. பிறந்தநாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

புதிய உச்சத்தில் ரூ.83,000-ஐ நெருங்கிய தங்கம்! எகிறும் வெள்ளி விலை!

பரபரப்பான சூழலில் அமித் ஷாவை இன்று சந்திக்கும் இபிஎஸ்!

ரயில் பயணிகள் கனிவான கவனத்திற்கு..! அக். 1 முதல் ஐஆர்சிடிசி ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம்!

மேட்டூர் அணை நீர்வரத்து: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT