ஜம்மு - காஷ்மீரில் 3 பாதுகாப்புப் படை வீரர்கள் காயம்
ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசியதில் 3 பாதுகாப்புப் படை வீரர்கள் புதன்கிழமை காயமடைந்துள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசியதில் 3 பாதுகாப்புப் படை வீரர்கள் புதன்கிழமை காயமடைந்துள்ளனர்.
காண்டர்பால் அருகே துதர்ஹாமாவில் தீவிரவாதிகள் சிலர் புதன்கிழமை கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில், காயமடைந்த 3 பாதுகாப்புப் படை வீரர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.