தற்போதைய செய்திகள்

மும்பையில் ஜன.15 வரை பள்ளிகள் திறக்கப்படாது: மாநகராட்சி

ANI

மும்பையில் ஜனவரி 15-ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என மும்பை மாநகராட்சி செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

கரோனா நோய்ப் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மூடப்பட்டது. 

தற்போது கரோனா பரவல் குறைந்து வருவதால் அந்தந்த மாநிலங்களின் சூழலுக்கு ஏற்ப பள்ளிகளை திறந்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதனையடுத்து மகாராஷ்டிர மாநிலத்தில் தொற்று பரவல் குறைந்த பகுதிகளான புணே போன்ற மாவட்டங்களில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.

இருப்பினும், மும்பையில் முழுவதுமாக தொற்று குறையாததால் பள்ளிகள் ஜனவரி 15ஆம் தேதி வரை திறக்கப்படாது என மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT