காதலியைக் கொன்று ஃபிரிட்ஜில் அடைத்த கடற்படை அதிகாரி!
காதலியைக் கொன்று ஃபிரிட்ஜில் அடைத்த கடற்படை அதிகாரி பற்றி..
விசாகப்பட்டினம்: இந்திய கடற்படையில் பணியாற்ற வரும் அதிகாரி, செல்ஃபோன் செயலி மூலம் நட்பான பெண் தொழியை கொன்று, உடலை ஃபிரிட்ஜில் மறைத்து வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
குற்றவாளி, சிந்தடா ரவீந்திரா என்ற கடற்படை அதிகாரி, ஏற்கனவே திருமணமான நிலையில் 31 வயதான பொளிப்பள்ளி மௌனிகா என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். சிந்தடாவின் மனைவி, தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மௌனிகா, வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, மௌனிகாலைவ சிந்தடா கொலை செய்திருக்கிறார். பிறகு, ஆன்லைன் செயலி மூலம் கத்தியை ஆர்டர் போட்டு வரவழைத்து, மௌனிகா உடலை மூன்று துண்டுகளாக வெட்டியிருக்கிறார். தலை மற்றும் கை, கால்களை எடுத்துக் கொண்டு வனப்பகுதியில் எரித்திருக்கிறார். உடலை ஃபிரிட்டிஜில் வைத்திருந்துள்ளார்.