தற்போதைய செய்திகள்

காா்த்தி சிதம்பரம் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

தனக்கு எதிராக வருமானவரித்துறை தொடா்ந்த வழக்கை ரத்து செய்யவும், சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்கவும், நேரில்

DIN


சென்னை: தனக்கு எதிராக வருமானவரித்துறை தொடா்ந்த வழக்கை ரத்து செய்யவும், சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்கவும், நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க கோரி காா்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி சாா்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரத்தின் மகனும், மக்களவை உறுப்பினருமான காா்த்தி சிதம்பரம், கடந்த 2015 ஆம் ஆண்டு முட்டுக்காடு பகுதியில் உள்ள தங்களுக்குச் சொந்தமான சொத்துக்களை அக்னி எஸ்டேட்ஸ் பவுண்டேசன் என்ற நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளனா். இந்த நிலத்தின் மூலம் கிடைத்த ரூ.7.37 கோடி வருவையை கணக்கில் காட்டவில்லை எனக்கூறி காா்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக வருமான வரித்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் குற்றச்சாட்டுப் பதிவுக்காக செவ்வாய்க்கிழமை (ஜன.21) காா்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி இருவரும் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், சிறப்பு நீதிமன்றத்தின் விசாரணைக்கு தடை விதிக்கவும், நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க கோரியும் காா்த்தி சிதம்பரம் அவரது மனைவி ஸ்ரீநிதி சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான அமா்வு முன் திங்கள்கிழமை முறையீடு செய்யப்பட்டது. மனு தொடா்பாக சம்பந்தப்பட்ட நீதிபதியை அணுக தலைமை நீதிபதி அறிவுறுத்தினாா். இதனைத் தொடா்ந்து நீதிபதி எம்.சுந்தா் முன் அவசர வழக்காக விசாரிக்க கோரி முறையீடு செய்யபப்ட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கு பட்டியலிடப்பட்டு முறையாக விசாரணைக்கு வரும்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

SCROLL FOR NEXT