மானாமதுரை ஒன்றியத்தில் மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள், முகக்கவசம் வழங்கல்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டாரத்தில் உள்ள அரசு நிதியுதவி பெறும் தெ.புதுக்கோட்டை எம்.கே.என். நடுநிலைப்பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு ஆகியன வழங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டாரத்தில் உள்ள அரசு நிதியுதவி பெறும் தெ.புதுக்கோட்டை எம்.கே.என். நடுநிலைப்பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் விடுமுறை காலத்திற்கு உரிய உலர் உணவுப் பொருள்களான அரிசி, பருப்பு ஆகியன வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் மூலமாக தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று ஒன்று முதல் எட்டாம் வகுப்பு முடிய உள்ள 255 மாணவர்களுக்கும் உணவுப் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
1 முதல் 5 வகுப்பு முடிய உள்ள மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா அரிசி 3 கிலோ 100 கிராமும், பருப்பு 1 கிலோ 200 கிராமும், 6 மமுதல் 8 வகுப்பு முடிய உள்ள மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா அரிசி 4 கிலோ 650 கிராமும், பருப்பு 1 கிலோ 250 கிராமும், பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுருநாதன் முன்னிலையில் வழங்கப்பட்டது.
பள்ளி தாளாளர் அன்பழகன் ஆலோசனையின் படி அனைத்து மாணவர்களுக்கும் முகக் கவசம் இலவசமாக வழங்கப்பட்டது.
மாணவர்கள் அனைவரும் சீருடை மற்றும் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தங்களுக்கான உணவுப் பொருட்களை மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.
நிகழ்ச்சியில் நிர்வாக குழு உறுப்பினர்கள் தங்கராசு, சத்தியமூர்த்தி, பள்ளி சத்துணவு அமைப்பாளர் (பொறுப்பு) திருமதி காவேரி, பள்ளி ஆசிரியர்கள் தெய்வானை, தேவி, நீலகேசி, சுப்புலெட்சுமி, மரகதம், மகாலெட்சுமி, ராமலெட்சுமி, மற்றும் சத்துணவு பணியாளர்கள் மாணவர்களுக்கு உரிய உணவு பொருட்கள் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.