தற்போதைய செய்திகள்

சேலம் மாவட்ட சர்வோதய சங்க ஊழியர்கள் முற்றுகை

DIN

சேலம் மாவட்ட சர்வோதய சங்கத்தில் புதிய செயலாளரை உள்ளே அனுமதிக்காததால், மற்ற ஊழியர்கள் அனைவரும் அவருக்கு ஆதரவாக வாயிலில் அமர்ந்து முற்றுக்கையிட்டனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள பாரதிபுரத்தில் சேலம் மாவட்ட சர்வோதய சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு செயலாளராக கே.ஆறுமுகம் இருந்துள்ளார். அவர் நிர்வாகத்தில் தன்னிச்சையாக முடிவெடுத்து செயல்பட்டு வந்ததாகவும் பலமுறைகேடுகள் செய்து உள்ளதாக கூறி கடந்த 15 நாட்களாக நிர்வாகம் செயல்படாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நிர்வாகக்குழு கூடி தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்டவர்கள் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் புதிய நிர்வாகிகளை உள்ளே விடாமலும், பணி செய்யவிடாமலும் ஆறுமுகம் தடுத்து வருவதாக ஊழியர்கள் வாயிலில் அமர்ந்து முற்றுகையிட்டனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. இது குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் காவல் நிலைய காவலர்கள் விரைந்து சென்று அவர்களை சமாதானப்படுத்தினர்.

ஆனால் சமாதானம் அடையாமல் அவர்கள் வாயிலில் காத்திருந்தனர். இது குறித்து புதிய செயலாளர் அமுதா நம்மிடம் கூறும்போது, ஆறுமுகம் ஊழியர்களிடம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறார். மேலும், யாரையும் பணி செய்யவிடாமல் தடுக்கிறார் எனக் குற்றம் சாட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT