தற்போதைய செய்திகள்

மீஞ்சூரில் பெரியார் சிலை முகப்பகுதி சேதம்

DIN

மீஞ்சூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பெரியார்  சிலையின் முகப்பகுதியை மர்ம நபர்கள் வியாழக்கிழமை இரவு சேதப்படுத்தியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேருந்து நிலைய  நுழைவு வாயில் பகுதியில், இரண்டடி உயரம் கொண்ட பெரியாரின் மார்பளவு வெண்கல சிலை உள்ளது. மர்ம நபர்கள் சிலர், சிலையின் முகப்பகுதியை  சேதப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த மீஞ்சூர் காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை செய்தனர். மேலும்,  சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் சேதப்படுத்தப்பட்ட பெரியார் சிலை அருகே காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மீஞ்சூரில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT