தற்போதைய செய்திகள்

கோவையில் மேலும் 27 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கோவை வந்த 27 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN


கோவை: சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கோவை வந்த 27 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து செவ்வாய்க்கிழமை கோவை வந்தவர்களுக்கு விமான நிலையத்தில் மேற்கொண்ட பரிசோதனையில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 13 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அரக்கோணம், காட்பாடி ரயிலில் வந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கோவையை சேர்ந்த 7 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுதவிர கருமத்தம்பட்டி சோதனைச் சாவடி வழியாக சென்னையில் இருந்து வந்த கோவையைச் சேர்ந்த 6 பேருக்கும், எகிப்த்தில் இருந்து கேரள வழியாக கோவை வந்த புதுக்கோட்டையை சேர்ந்தவருக்கு வாளையார் சோதனைச் சாவடியில் மேற்கொண்ட பரிசோதனையில் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதன்கிழமை ஒரே நாளில் கோவையில் 27 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT