தற்போதைய செய்திகள்

அகரத்தில் பானை கண்டுபிடிப்பு, கொந்தகையில் முதுமக்கள் தாழிகள் அளவிடும் பணி தொடக்கம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அகரத்தில் நடந்து வரும் அகழாய்வில் பானைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  கொந்தகை அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழிகளை அளவிடும் பணியும் தொடங்கியுள்ளது.

DIN


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அகரத்தில் நடந்து வரும் அகழாய்வில் பானைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  கொந்தகை அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழிகளை அளவிடும் பணியும் தொடங்கியுள்ளது.

கீழடியில் கடந்த பிப்ரவரி 19 ந் தேதி முதல் 6 ஆம் கட்ட அகழாய்வு தொடங்கி நடந்துவருகிறது. மேலும் அருகேயுள்ள அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய இடங்களிலும் அகழாய்வு விரிவுபடுத்தப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

இந்த இடங்களில் நடந்து வரும் அகழாய்வில்  கீழடி, கொந்தகை, மணலூர், அகரத்தில் அடுத்தடுத்து மண்ணால் வடிவமைக்கப்பட்ட சுடு உலை, பானைகள், முத்துமக்கள் தாழிகள், முதுமக்கள் தாழிகளுக்குள் மனித எலும்புகள், விலங்கின வகை எலும்பு உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த நிலையில் அகரத்தில் அகழாய்வுக் குழியில் மண்பானை புதைந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது 2600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய பானை என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் கொந்தகையில் அதிக அளவில் முதுமக்கள் தாழிகள் கிடைத்து வருகின்றன. இதுவரை 10 க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வாளர்கள் தற்போது இந்த தாழிகளை அளவீடு செய்யும் பணியை தொடங்கியுள்ளனர். இதுவரை 3 முதுமக்கள் தாழிகள் மட்டுமே அளவீடு செய்யப்பட்டுள்ளது.

இனிவரும் நாட்களில் அனைத்து தாழிகளும் அளவீடு செய்து தொல்லியல் துறை நிர்வாகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருதாளா்கள் அறிவிப்பு: அக்.2-இல் சென்னையில் விருது வழங்கும் விழா

ரூ. 2 லட்சம் கோடி முதலீட்டுக்கு வழி வகுத்துள்ள ஜிஎஸ்டி சீா்திருத்தம்: நிா்மலா சீதாராமன்

வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் வண்ணப் புகைப்படம்: பிகாா் தோ்தலில் அறிமுகம்

2002, 2005-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியல் அடிப்படையில் தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தம்: தோ்தல் துறை முடிவு

திருவண்ணாமலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

SCROLL FOR NEXT