முகப்பு
தற்போதைய செய்திகள்

கோடியக்கரை நடுக்கடலில் மற்றொரு ராமேசுவர மீனவர் சடலம் மீட்பு 

கோடியக்கரை நடுக்கடலில் மற்றொரு மீனவர் ஆஸ்டின் சுசிந்தர் உடலை மீட்புக் குழு மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வருகின்றனர் 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:49 PM
பகிர்:

ராமேசுவரத்திலிருந்து கடந்த 13 -ஆம் தேதி மீன்பிடிக்க சென்று மாயமான நான்கு மீனவர்களில் ஒரு மீனவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மற்ற 3 மீனவர்கள் ரெஜின் பாஸ்கர் உடல் நேற்று வெள்ளிக்கிழமை தஞ்சை மாவட்டம் கொள்ளக்காடு பகுதி மீனவர்கள் உடலை மீட்டு கொண்டு வந்தனர்.

இந்நிலையில், சனிக்கிழமை கோடியக்கரை நடுக்கடலில் மற்றொரு மீனவர் ஆஸ்டின் சுசிந்தர் உடலை மீட்புக் குழு மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வருகின்றனர் 

இது வரையில் ஒரு மீனவர் உயிருடன் மீட்கப்பட்டும், இரண்டு மீனவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மற்ற ஒரு மீனவரை தேடும் பணியில் சக மீனவர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.