தற்போதைய செய்திகள்

கரோனா: விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 4 பேர் பலி 

DIN


விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.  

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விழுப்புரம் அருகே வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர், வானூர் அடுத்த தென்சிறுவலூர் பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர், அரியலூர் திருக்கையைச் சேர்ந்த அண்மையில் உயிரிழந்த இளைஞரின் தாயார், கண்டாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் என நான்கு பேர் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 -ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாலை வெளியாகும் என தெரிகிறது.

மாவட்டத்தில் இதுவரை 551 பேருக்கு கரோனா நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

SCROLL FOR NEXT