தற்போதைய செய்திகள்

கரோனா தொற்று உறுதி: தலைஞாயிறு அருகே டாஸ்மாக் கடையை திறக்கவிடாமல் முற்றுகை

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை  அடுத்த தலைஞாயிறு அருகே கரோனா தொற்று உறுதியானதையடுத்து டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், கொருக்கை பகுதியில் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதையடுத்து அந்த பகுதியை சார்ந்து நாகை மாவட்ட எல்லைக்குள்பட்ட துளசாபுரம், சாக்கை சாலக்கடை பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையை திறக்க கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கொருக்கை ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் வேதரத்தினம் தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சியினர், கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களிடம், காவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை!

திருப்பம் தரும் தினப்பலன்

தினம் தினம் திருநாளே!

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

SCROLL FOR NEXT