வாஷிங்டன்: அமெரிக்காவில் கரோனா தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 24,62,554 -ஆக உயர்ந்துள்ளது.
கரோனா தொற்று பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதிப்பும், பலியும் அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை இதுவரை 24,62,554 ஆக உயர்ந்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 1,24,281 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் 1,24,281-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோரின் சதவீதம் 11 சதவீதமாக உயர்ந்துள்ளது.