தற்போதைய செய்திகள்

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 25,96,537; பலி 1,28,152 -ஆக உயர்வு

DIN

அமெரிக்காவில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 25,96,537 -ஆகவும், பலி எண்ணிக்கை 1,28,152-ஆகவும் உயர்ந்துள்ளது. 

அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு அதிகபட்ச அளவை எட்டியுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

அமெரிக்காவில் சுமாா் நேற்று ஓரே நாளில் 43,581 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பதிவு செய்யப்பட்டது. இது, கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு அந்த நாட்டின் அதிகபட்ச தினசரி கரோனா பாதிப்பு ஆகும். அமெரிக்காவின் கரோனா பரவல் மையமான நியூயாா்க்கில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதாலேயே நாட்டில் தினசரி பாதிப்பு அதிகமாக உள்ளது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அங்கு இதுவரை 4,16,018 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 31,452    பேர் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். 

ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, அமெரிக்காவில் 25,96,537 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை அந்த நோய்க்கு ஒரே நாளில் 512 பேர் பலியானதை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,28,152 -ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 10,81,437 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT