முகப்பு
தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிரத்தில் கரோனா பலி எண்ணிக்கை 459 -ஆக உயர்வு

மகாராஷ்டிரத்தில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 459-ஆக உயர்ந்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:34 PM
பகிர்:


மகாராஷ்டிரத்தில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 459-ஆக உயர்ந்துள்ளது. 

தேசிய அளவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா நோய்த்தொற்றால் 74 பேர் உயிரிழந்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை 9 மணி நிலவரப்படி, புதிதாக 1,993 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35,043 -ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 1,147 -ஆக அதிகரித்துள்ளது. 

மொத்த வழக்குகளில், 25,007 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 8,888 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இந்நிலையில், நாட்டில் மகாராஷ்டிரத்தில்தான் அதிகபட்சமாக 10,498 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் 27 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 459 -ஆக உயர்ந்துள்ளது, 1,773 பேர் குணடைந்துள்ளனர். அதற்கு அடுத்ததாக குஜராத்தில் 4,395 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 214 பேரும், தில்லியில் 3,515 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 59 பேர் பலியாகியுள்ளனர்.  

முழு கட்டுரையைப் படிக்க →