தற்போதைய செய்திகள்

பள்ளிகள் திறப்பு : நவ.9-ம் தேதி கருத்துக் கேட்புக் கூட்டம்

DIN

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து நவம்பர் 9ஆம் தேதி கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படும் என புதன்கிழமை தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தியில்,

தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 16ஆம் தேதி 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து நவம்பர் 9ஆம் தேதி பள்ளிகளில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படும்.

இதில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம். நேரில் வர முடியாதவர்கள் கடிதம் மூலம் தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்.

கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.  

இதற்குமுன், நவம்பர் 16ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கலாம் என அக்டோபர் 31ஆம் தேதி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

SCROLL FOR NEXT