முகப்பு
தற்போதைய செய்திகள்

பிகாரில் நாளை(நவ.7) 3ம் கட்டத் தேர்தல்

பிகாரில் நாளை(நவம்பர் 7) மூன்றாம் கட்டத் தேர்தல் நடக்கவுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:48 PM
பகிர்:

பிகாரில் நாளை(நவம்பர் 7) மூன்றாம் கட்டத் தேர்தல் நடக்கவுள்ளது.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டமாக நடைபெற்று வருகின்றது. முதற்கட்டமாக அக்டோபர் 28ஆம் தேதி 71 சட்டப்பேரவையிலும், இரண்டாம் கட்டமாக நவம்பர் 3ஆம் தேதி 94 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நடைபெற்றது.

இந்நிலையில், நாளை மூன்றாம் மற்றும் இறுதி கட்டத் தேர்தல் 2.35 கோடி வாக்காளர்களைக் கொண்ட 15 மாவட்டங்களில் உள்ள 78 தொகுதிகளுக்கு நடக்க உள்ளது.

இதையடுத்து, நவம்பர் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

அக்டோபர் 28ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்டத் தேர்தலில் 71 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 53.54 சதவிகித வாக்குகளும்,  நவம்பர் 3ஆம் தேதி 94 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 53.51 சதவிகித வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →