தற்போதைய செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் 3.5 கிலோ தங்கம் பறிமுதல்

ANI

சென்னை விமான நிலையத்தில் சுமார் ரூ. 1.85 கோடி மதிப்புள்ள 3.5 கிலோ தங்கத்தை கடத்த முயன்ற 5 பேரை கைது செய்ததாக சுங்கத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

எமிரேட்ஸ் விமானம் மூலம் துபையிலிருந்து திங்கள்கிழமை வந்த 3 பயணிகளை சோதனை செய்யப்பட்டனர்.

அதில், ஒரு பயணி முகமூடியில் 114 கிராம் எடையுள்ள தங்க பேஸ்ட்கள் தைக்கப்பட்டிருந்தன, மேலும் 50 கிராம் எடையுள்ள ஒரு தங்கச் சங்கிலியும் மீட்கப்பட்டன.

அவரைத் தொடர்ந்து சோதனை செய்யப்பட்ட மற்ற மூன்று பேரிடம் இருந்து 16 பாக்கெட் தங்க பேஸ்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

சுங்க சட்டம் 1962 இன் கீழ், ரூ .97.82 லட்சம் மதிப்புள்ள மொத்தம் 1.84 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கங்கள்

இதனைத் தொடர்ந்து, முன்னதாக துபையில் இருந்து வந்த இண்டிகோ மற்றும் எமிரேட்ஸ் விமானங்கள் மூலம் வந்த ஏழு பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அவர்களிடமிருந்து ரூ .87.48 லட்சம் மதிப்புள்ள மொத்தம் 1.65 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது, மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

SCROLL FOR NEXT