மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
28 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் இரவு 9 மணி நிலவரப்படி, 18 தொகுதிகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பாஜக 13, காங்கிரஸ் 5 இடங்களை வென்றுள்ளனர்.
மீதமுள்ள 10 தொகுதிகளுக்கு தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது, அதில் பாஜக 6, காங்கிரஸ் 4 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.
இதன்மூலம், மத்திய பிரதேசத்தில் பாஜக தனது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் சூழல் நிலவுகிறது.