2020-ம் ஆண்டு 4,052 முறை அத்துமீறிய பாகிஸ்தான்
பாகிஸ்தான் ராணுவம் 2020ஆம் ஆண்டில் 4,052 முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இந்திய ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் 2020ஆம் ஆண்டில் 4,052 முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இந்திய ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராணுவத் தரப்பில் தெரிவித்ததாவது,
இந்தியாவுடன் செய்து கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் ராணுவம் 4,052 முறை இந்த ஆண்டு மீறியுள்ளது. இதில், நவம்பர் மாதத்தில் 128 முறையும், அக்டோபர் மாதத்தில் 394 முறையும் மீறியுள்ளனர்.
கடந்தாண்டு மொத்தமாக 3,233 முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.